முகாம்களில் அளிக்கும் மனுக்களை பொது மக்களின் வாழ்க்கையாகக் கருத வேண்டும் அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்

1 Min Read

சென்னை, ஆக. 30- ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள், மகளிர் உரிமைத் தொகை மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சிவாயிலாக துணை முதலமைச்சர் உதயநிதி நேற்று (29.8.2025) ஆய்வு மேற்கொண்டார்.தலைமைச் செயலர் நா.முருகானந்தம், சிறப்பு திட்ட செயலாக்கத் துறைச் செயலர் பிரதீப் யாதவ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலர் பெ.அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் உதயநிதி பேசியதாவது:

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் இதுவரை 11.50 லட்சம் மனுக்கள் வந்துள்ளன. அதேபோல, மகளிர் உரிமைத்தொகை மனுக்கள் 17 லட்சம் வந்துள்ளன.

இந்த மனுக்களை காகிதமாக பார்க்காமல், மக்களின் வாழ்க்கையாக பார்க்க வேண்டும். முடிந்த அளவுக்கு விரைவாக தீர்வுகாண வேண்டும். தீர்வுகாண இயலவில்லை எனில் அதன் காரணத்தை முறையாக பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *