கண்டிப்பும் – பாராட்டும்

1 Min Read

அரசியல்

தேவதாசி ஒழிப்புச் சட்டத்தால், ஆடல் பாடல் கலைகள் அழிந்து விட்டன’ என்று ‘இந்தியா டுடே’- வில் ஆசிரியராக இருந்த வாஸந்தி ஒரு கட்டுரை எழுதினார்.

கட்டுரையை படித்த தி.மு.க. தலைவர் கலைஞர், உடனடியாக “தேவதாசியாகவே வாழ்ந்த ஒருவர் எழுதியது போல சிறப்பாக இருக்கிறது” என்று வஞ்சப் புகழ்ச்சி அணியில் கூற, வேதனையில் மூழ்கினார் ஆசிரியர் வாஸந்தி.

அவர் தனக்குத் தெரிந்த தி.மு.க. தலைவர் களை யெல்லாம் அழைத்து, ‘கலைஞர் இப்படி பேசி விட்டார்’ என்று அதிகம் வருத்தப் பட்டார். இதனை அடுத்து மூத்த தி.மு.க. தலைவர்கள் கலைஞரிடம் வாஸந்தியின் வருத்தத்தை  தெரிவித்தனர். அதற்கு கலைஞர் “என்னய்யா… தேவதாசி முறை வேணுமாம். ஆனா வேற ஒரு குடும்பத்து பெண்கள் தேவதாசியா இருக்கணுமாம்.  இவுங்க இருக்க மாட்டாங்களாம்” என்று கூறியதாக கூறப்பட்டது.  இந்த நிலையில் உண்மையை உணர்ந்த வாஸந்தி அதன் பிறகு தேவதாசி முறையின் கொடுமைகள் குறித்து ‘விட்டு விடுதலையாகி’ என்ற நாவலை எழுதினார் – அதற்காக உடனடியாக அழைத்துப் பாராட்டினார் கலைஞர்.

அவர் கண்டித்ததால் புதினம் வந்தது. அதற்கு பாராட்டும் தெரிவித்தவர் கலைஞர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *