ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

3.6.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* தாங்கள் அறிவித்த இலவச 200 யூனிட் மின்சாரம் உள்ளிட்ட அய்ந்து வாக்குறுதிகளையும் இந்த நிதி ஆண்டில் நிறைவேற்றுவோம் என கருநாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* நீட் மதிப்பெண் குறித்த மோசடியை விசாரிக்க, கேரள உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு

டைம்ஸ் ஆப் இந்தியா:

* பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசமைப்பு சட்டத்தின் முகப்புரையை தினமும் கட்டாயம் படிக்க வேண் டும் என கருநாடக அரசு முடிவு செய்துள்ளது.

தி டெலிகிராப்:

* பிரதமர் நரேந்திர மோடிக்கு மகத்தான ஆதரவு இருக்கிறதே என்ற கேள்விக்கு,  அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் இடையே தொடர்பை துண்டிக்கும் போது தான் இது போன்ற பொய்ப் பிரச்சாரம் செயல்படும் என்று – ராகுல் பதில்.

மக்களவை உறுப்பினர் 

வெங்கடேசன் பேட்டி:

* புதிய நாடாளுமன்றத்தின் எல்லாச் சுவர்களிலும் சனாதனமும், சமஸ்கிருதமும் மட்டுமே காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. நாடாளுமன்றம் பாஜக அலுவலகம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *