முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பெயரை கருப்பு மை பூசி அழித்து பா.ஜ.க.வினர் வெறியாட்டம்

2 Min Read

அரசியல்

ஓசூர், ஜூன் 4 விளையாட்டு மைதானத்திற்கு கலைஞர் பெயர் சூட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட் டம் நடத்தியபோது, அவரது பெயரை கருப்பு மை பூசி அழித்த தால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டித்து சட்டமன்ற உறுப்பினர் மற்றும்  மேயர் தலைமையில் தி.மு.க. வினர் போராட்டம் நடத்தினர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காமராஜ் காலனியில், ஆர்.வி. அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமான விளை யாட்டு மைதானம் உள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தை, ஓசூரை சேர்ந்த மறைந்த சமூக ஆர்வலர்கள் ராம்பிரகாஷ்- _ விஜய லட்சுமி இணையர், மாணவர்களின் பயன்பாட்டுக்காக கொடையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மேனாள் முதல்-அமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த விளையாட்டு மைதானத்திற்கு ‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி விளையாட்டு திடல்’ என்று பெயர் சூட்ட, ஓசூர் மாநகராட்சி கூட்டத்தில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, நேற்று (3.6.2023) காலை கலைஞரின் பிறந்தநாளை யொட்டி, விளையாட்டு மைதா னத்தில் அவரது பெயரில் புதிய பெயர் பலகையை திறந்து வைக்க வும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில், அந்த விளை யாட்டு மைதானத்திற்கு கலைஞர் பெயர் சூட்ட பா.ஜனதாவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, விளை யாட்டு மைதானம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்   பா.ஜ.க.வினர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த நிலையில், திடீரென பெயர் பலகையில் கலைஞர் பெயரை, கருப்பு மையை பூசி அழிக்கும் பணியில் பா.ஜனதாவை சேர்ந்த 2 பேர் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், அவர்களை தடுத்து நிறுத்தி, மை குப்பியை பறிமுதல் செய்தனர். மேலும், கருப்பு மையால் பெயர் அழித்தவர்களை காவலர்கள் தடுத்ததால் கட்சியினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே கைகலப்பும், வாக்குவாதமும் ஏற்பட்டது. இதுதொடர்பாக ஓசூர் தெற்கு மண்டல பா.ஜனதா தலைவர் கே.நாகு என்ற நாகேந்திரா (40) மற்றும் அலசநத்தம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (40) ஆகிய 2 பேரை, காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தி.மு.க.வினரும்  போராட்டம்

முன்னதாக பெயர் பலகையில் கலைஞர் பெயர் அழிக்கப்பட்ட தகவல் அறிந்து, தி.மு.க. மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான  ஒய்.பிரகாஷ்   மேயர் சத்யா ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் அங்கு குவிந்தனர். மேலும் விளையாட்டு மைதானம் முன்பு தரையில் அமர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *