பொறியியல் கல்லூரிகளில் தமிழ் ஆசிரியர்கள் நியமனம் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு

Viduthalai
1 Min Read

சென்னை, ஜூன் 4 – பொறியியல் கல்லூரிகளில் உரிய கல்வித் தகுதியுடன் தமிழ் ஆசிரியர்களை நிய மிக்க அண்ணா பல்கலைக்கழகம் உத்தர விட்டுள்ளது.

இதுதொடர்பாக இணைப்பு கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூ ரிகளின் முதல்வர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி (பொறுப்பு) பி.சக்திவேல் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பல்கலைக்கழக பாடத்திட்டத்தின்படி, பி.இ. பி.டெக். மாணவர் களுக்கு முதல் பருவத்தில் தமிழர் மரபு, 2ஆம் பரு வத்தில் தமிழரும் தொழில் நுட்பமும் ஆகிய பாடங்கள் நடத்தப்பட்டு வரு கின்றன.

கல்லூரிகளில் தமிழ் ஆசிரியர்களை இன்னும் நியமிக்காமல் இருந்தால், உடனே நியமிக்க வேண்டும். அவர்களது கல்வித் தகுதி குறைந்தபட்சம் எம்.ஏ. எம்.ஃபில். படிப் புடன் ‘ஸ்லெட்’ அல்லது ‘நெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தங்கள் கல்லூரியில் ஏற்கெனவே தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டி ருந்தால், அவர்களது பெயர், கல்வித் தகுதி, நியமிக்கப் பட்ட நாள் உள்ளிட்ட விவரங்களை பல்கலைக் கழகத்துக்கும், அதன் நகலை மண்டல அலுவலருக்கும் அனுப்ப வேண்டும். மேற்கண்ட விவரங்கள் ஜூன் 12ஆம் தேதிக் குள் அனுப்பப்பட வேண்டும். -இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *