தினசரி கரோனா பாதிப்பு 202 ஆக சரிவு – தொற்றால் 2 பேர் சாவு

1 Min Read

புதுடில்லி, ஜூன்.5 –  நாடு தழுவிய அளவில் தினசரி  கரோனா  பாதிப்பு தொடர்ந்து சரிகிறது. நேற்று முன்தினம்  (3.6.2023) 237பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று (4.6.2023)  இந்த எண்ணிக்கை மேலும் சரிந்து 202 ஆனது. இதுவரை 4 கோடியே 49 லட்சத்து 91 ஆயிரத்து 582 பேர் தொற்று பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். தொற்று பாதிப்பில்இருந்து நேற்று ஒரு நாளில் 359 பேர் மீண்டனர். இதுவரையில் மொத்தம் 4 கோடியே 44 லட் சத்து 56 ஆயிரத்து 359 பேர் மீண்டுள்ளனர்.

 சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் 4 பேர் பலியாகினர். நேற்று மேற்கு வங்காளத்திலும், மேகாலயாவிலும் தலா ஒருவர் இறந்துள்ளனர். தொற்றால் நாட்டில் இறந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட் சத்து 31 ஆயிரத்து 880 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண் ணிக்கையில் நேற்று 159 குறைந் தது. இதனால் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,343 ஆக குறைந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *