பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவருக்கு தேசிய அளவிலான கருத்தரங்கில் பரிசு

1 Min Read

சேலம், ஆக.24- சேலம் SS மருந்தியல் நிறுவனம் “Strategic Solutions for Addressing Global Health Needs Through Pharmacy” என்ற தலைப்பிலான ஒருநாள் தேசிய கருத்தரங்கை 19.08.2025 அன்று நடத்தியது.

இதில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தாக்கவியல் துறைத் தலைவர் முனைவர் இரா. இராஜகோபாலன் வழிகாட்டுதலில் நான்காமாண்டு இளநிலை மருந்தியல் மாணவர்
மு.கார்த்திகேயன் கலந்து கொண்டு தமது ஆய்வுக்கட்டுரையினை சமர்ப்பித்தார்.

25க்கும் மேற்பட்ட மருந்தியல் கல்லூரிகள் பங்கு கொண்ட இப்போட்டியில் இரண்டாமிடம் பிடித்து பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழினைப் பெற்று மு.கார்த்திகேயன் கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

பரிசு வென்ற மாணவரை கல்லூரி நிர்வாகத்தினர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *