நமது தோழருக்குப் பாராட்டு – வாழ்த்துகள்!

1 Min Read

இந்தோனேசியா பன்னாட்டு டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஸ் லீக் 2025, ஆகஸ்ட் 14 முதல் 16 வரை இந்தோனேசியா பாலியில் நடைபெற்ற பன்னாட்டு டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த இரா.எத்திராஜன், தகுதி சுற்றில் முதலிடம் பெற்று, மேல் சுற்றில் 8ஆம் இடம் (Top Round 8) வரை முன்னேறினார்.

300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட போட்டியில், தமிழ்நாட்டின் இரா.எத்திராஜன், கிலிசிக் (சிங்கப்பூர்) 3-2, ஒகா (ஜகர்தா) 3-2,  அவன் (இந்தோனேஷியா) 3-0, கேமின் (பாலி)3-0   என்ற கேம் கணக்கில் வெற்றி பெற்றார்.

பன்னாட்டு டேபிள் டென்னிஸ் (சிங்கப்பூர்) ஒருங்கிணைப்பாளர் வரதராஜன், எத்திராஜனுக்கு,  பதக்கத்தை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இரா. எத்திராஜன் பன்னாட்டு டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பில் (ITTF) சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *