யான்மரில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

1 Min Read

யாங்கூன், ஆக. 21- மியான்மர் நாட்டில் நேற்று (20.8.2025) மாலை 6.16 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய நில அதிர்வு மய்யம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கம், நிலப்பரப்பில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் மய்யம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், மிதமான அளவிலான நிலநடுக்கம் என்பதால், பெரிய பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பின் அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த மார்ச் 28 அன்று மியான்மரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 3,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *