ரூ.500 விலையில் சமையல் எரிவாயு உருளை விநியோகம் ராஜஸ்தான் காங்கிரஸ் முதலமைச்சர் துவக்கி வைத்தார்

1 Min Read

அரசியல்

ஜெய்ப்பூர், ஜூன் 7 ராஜஸ்தானில் சட்டப் பேரவைத் தேர்தல் நடை பெற இன்னும் 6 மாதங்களே இருக் கும் நிலையில் ஏழை மக்களுக்கு ரூ.500 விலையில் சமையல் எரிவாயு உருளை விநியோகத்தை முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு   தொடங்கி வைத்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே ஏழைகளுக்கு ரூ.500 விலையில் சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும் என்று கெலாட் அறிவித்திருந்தார். சமீபத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையிலான சிரஞ்சீவி மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தையும் அவர் அறிவித்திருந்தார்.

“சேமிப்பும் நிவாரணமும் தான் ராஜஸ்தான் மாநில பட்ஜெட்டின் குறிக்கோளாகும். ரூ.500-க்கு சிலிண்டர் வழங்குவதன் மூலம் மக்களுக்கு நாங்கள் நிவாரணம் அளித்துள்ளோம். நாட்டில் உள்ள மக்களுக்கு சமூக பாதுகாப்பும், சுகாதார பாதுகாப்பும் கிடைக்க வேண்டும்” என்று முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்தார்.  ரூ.1150 மதிப்புள்ள சமையல் எரிவாயு உருளையை, 14 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.650 மானியம் விலையில் வழங்கினால் அரசுக்கு ரூ.60 கோடி செலவாகும் என்றும், இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி 73 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கினால் ரூ.1500 கோடி அரசுக்கு செலவாகும் என்றும் கூறப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *