பசுவதை தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்படுமா? கருநாடக முதலமைச்சர் கருத்து

Viduthalai
2 Min Read

அரசியல்

பெங்களுரு, ஜூன் 7 கருநாடகாவில் பாஜக ஆட்சியில் கொண்டுவந்த பசுவதை தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய தற்போதைய காங்கிரஸ் அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் நேற்று (6.6.2023) போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கருநாடகாவில் கடந்த 2021-ஆம் ஆண்டு பசுவதை தடுப்பு சட்டத்தில் முக்கியமான திருத்தங்களை பாஜக தலைமையிலான அரசு கொண்டு வந்தது. அதாவது, 13 வயதுக்கும் அதிகமான பசு மற்றும் எருமை களையே இறைச்சிக்காக வெட்ட வேண்டும். அதனை மீறினால் 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை யும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என திருத்தப்பட்டது.

இதற்கு காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளும், தாழ்த்தப்பட்ட, முசுலிம் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்த சட்டம் ரத்து செய்யப்படும் என தற் போதைய முதலமைச்சர் சித்தரா மையா தெரிவித்தார். இந்நிலையில் கருநாடகாவில் காங்கிரஸ் அரசு அமைந்துள்ள நிலையில், பசுவதை தடுப்புச் சட்டம், மதமாற்ற தடை சட்டம், ஹிஜாப் தடை உள்ளிட் டவற்றை ரத்து செய்ய மாநில அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து கருநாடக கால் நடைத்துறை அமைச்சர் வெங்க டேஷ் செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பசுவதை தடை சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர முடிவெடுத்துள்ளோம். இறைச் சிக்காக எருமைகளை வெட்டும் போது ஏன் பசுக்களை வெட்டக் கூடாது? அதில் என்ன தவறு இருக் கிறது?” என கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து மேனாள் முதல மைச்சர் பசவராஜ் பொம்மை கூறும்போது, ‘‘பசுவதை தடுப்பு சட்டத்தை நாங்கள் கொண்டு வரவில்லை. ஏற்கெனவே ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கொண்டுவந்த சட்டத்தையே திருத்தினோம். பாஜக ஆட்சியில் கொண்டுவந்த திருத்தங்களை மாற்ற முடிவெடுத் திருப்பது கண்டிக்கத்தக்கது. பசுவை தெய்வமாக வணங்கும் பழக்கம் நாட்டில் உள்ளது. இந்துக்களுக்கு பசுவுடன் உணர்வு ரீதியான பிணைப்பு உள்ளது. அதனைக் கெடுக்கும் வகையில் செயல்பட்டால் காங்கிரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம்” என்றார். இந்நிலையில், கருநாடக அரசையும் முதலமைச்சர் சித்தராமையாவையும் கண்டித்து இளைஞர் பாஜகவினர் பெங்களூரு, மைசூரு, மங்களூரு, ஷிமோகா உள்ளிட்ட இடங்களில் போராட்டத்தில் ஈடு பட்டனர். அப்போது பசுவதை தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக் கூடாது என முழக்கம் எழுப்பினர்.

இதுகுறித்து கருநாடக முதல மைச்சர் சித்தராமையாவிடம் செய்தியாளர்கள் கேட்டப்போது, ‘‘இந்த சட்டம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. விரைவில் அமைச்சரவைக் கூட்டத்தில் விவா திக்க இருக்கிறோம்” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *