ரயில் விபத்தில் பலியானவர்களின் உறவினர்களுக்கு அரசு வேலை மம்தா அறிவிப்பு

1 Min Read

அரசியல்

கொல்கத்தா, ஜூன் 7 ஒடிசாவின் பால சோரில் ரயில் விபத்தில் உயிரிழந்த வர்களின் உறவினர் களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா அறிவித் துள்ளார். இந்த பயங்கர விபத்தில் கை, கால்களை இழந்தவர் களின் உறவினர்களுக்கும் அரசு வேலை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் கோரமண்டல் விரைவு ரயிலில் பயணம் செய்து தற்போது மனம் மற்றும் உடல் ரீதியான பாதிப்புக் குள்ளானவர்களுக்கும் தனது அரசாங்கம் பண உதவி அளிக்கும் என்று அவர் கூறினார். விபத்து தொடர்பாக எந்த அரசி யலிலும் ஈடுபட விரும்பவில்லை. காயமடைந்த பய ணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் செய்வேன் என்றும் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *