தேர்தல் ஆணையம் நாட்டில் தேர்தல் நடத்துவதற்கான ஒரு சுதந்திரமான அமைப்பு மட்டும் தான்! சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்குச் சரியான வாக்காளர் பட்டியல் அவசியம்! மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம்

புதுடில்லி, ஆக.12 தேர்தல் ஆணையம் நாட்டில் தேர்தல் நடத்துவதற்கான சுதந்தி ரமான அமைப்பு மட்டும்தான். அது நீதிமன்றம் அல்ல என  மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ப.சிதம்பரம் தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கடந்த வாரம் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது கடந்த காலங்களில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கட்சி வாக்குகளை திருடித்தான் ஆட்சியைப் பிடித்தது.

குறிப்பாக கருநாடகாவின் மத்திய தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் ஓட்டுப்போட்டதாகவும், ஒருவரே 2 முறை வாக்களித்ததாகவும் ஆதா ரங்களுடன் விளக்கினார்.

தேர்தல் ஆணையம்
உடந்தை

இந்த வாக்கு திருட்டில் பா.ஜ.க.விற்கு தேர்தல் ஆணையம் உடந்தையாக செயல்பட்டதாகவும் தேர்தல் ஆணையத்தை கடுமையாக குற்றம் சுமத்தி பேசியிருந்தார்.

ராகுல் காந்தியின் பேச்சுக்கு பா.ஜ.க. கட்சியினரிடம் இருந்தும், தேர்தல் ஆணை யத்திடம் இருந்தும் எதிர்ப்பு குரல் வந்தன. பெங்களூருவில் ராகுல் காந்தி சமீபத்தில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் தேர்தல் ஆணையத்தின் தரவுகள் என சில ஆவணங்களை காட்டினார். அதில் ஒரு வாக்காளர் 2 முறை வாக்களித்ததாக அந்த தரவில் கூறப்பட்டுள்ளது.

தேர்தலில் போலி வாக்குப் பதிவு நடந்திருப்பது உண்மையென்றால், வாக்கு திருட்டு நடந்திருப்பது உண்மை என்றால் ராகுல் காந்தி அவரது குற்றச்சாட்டுகளுடன் உறுதிமொழி பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

தனது ‘எக்ஸ்’
பக்கத்தில்…

இந்த நிலையில் ராகுல் காந்திக்கு ஆதர வாக தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தேர்தல் ஆணையம் நாட்டில் தேர்தல் நடத்துவதற்கான ஒரு சுதந்திரமான அமைப்பு மட்டும் தான். அதற்கு நியாமான முறையில் தேர்தல் நடத்துவதற்கான பொறுப்பு உள்ளது. மாறாக கேள்வி கேட்பதற்கு அது கோர்ட்டு அல்ல.

1960 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகள் 20(3)(பி) கீழ் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான உரிமைக் கோரலை ஏற்றுக்கொள்வது அல்லது நிரா கரிப்பது குறித்த வழக்குக்கு மட்டுமே இது பொருந்தும்.

பொருந்தாது!

ஒரு முழு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் பட்சத்தில் இது பொருந்தாது என்று பதி விட்டுள்ளார்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *