தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 500 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்கள் 6.6.2023 அன்று திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 8.6.2023 அன்று சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மய்யங்களை நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது துணை மேயர்மு.மகேஷ்குமார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.