வழி காட்டுகிறது அசோக் லைலான்ட் தொழிற்சங்கம்!

Viduthalai
1 Min Read

அரசியல்

ஒசூர், ஜூன் 10- ஒசூர் -பாகலூரில் இயங்கிவந்த ஏசியன்பேரிங் கம்பெனி கடந்த 17 ஆண்டுகளாக கதவடைப்பு செய்யபட்டு அங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் பல்வேறு துன்பத்திற்கு ஆளாகி யுள்ளனர்.

அந்த தொழிலாளர்கள் அமைத் துள்ள ஏசியன் பேரிங் ஒர்க்கர்ஸ் யூணியன் பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் வெளிபோராட்டங்கள் நடத்திட வேண்டி உள்ளது.

ஒசூரில் இயங்க கூடிய பெரிய நிறுவனங்களில் அசோக்லை லேன்ட் தொழிற்சாலையும் ஒன்று! மேற்கண்ட ABL தொழிலாளர்கள் தங்களது போட்டத்திற்கான நிதி வேண்டி கடிதம் தந்தபோது அசோக்லைலேன்ட் எம்ளாயிஸ் யூணியன் அதை ஏற்று தொழிலா ளர் மத்தியில் அறிவிப்பு செய்தது டன் 7.6.2023 அன்று மாலை சங்க நிர்வாகிகள் முன்னிலையில் பாதிக் கப்பட்ட தொழிலாளர்கள் துண் டேந்தி நிற்க தொழிலாளர்கள் தங்களாலான நிதியை துண்டில் போட்டுச் சென்றனர்.

அரை மணி நேரத்தில் 57,554 ரூபாய் நிதி வசூலானது. இரு தொழிற்சங்க நிர்வாகிகளும் ஒரு வருக்கொருவர் நன்றி தெரிவித்து கொண்டனர்.தொழிலாளர்களுக் காக!

இந்நிகழ்ச்சியில், அசோக் லைலே லன்ட் தொழிற்சங்க பொதுசெயலா ளர் சத்திவேல், பொருளாலர் குமார் இணைச் செயலாளர்கள் ராஜாராம், ரவிகுமார் உபதலைவர் டென்னீஸ், செயற்குழு உறுப்பினர் கள். ஏசியன்பேரிங் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர், சொக்கநாதராஜ், பொதுசெயலாளர் கிறிஸ்துநேசன், பொருளாளர் தேவராஜ், செயற் குழு உறுப்பினர்கள் நாராயணன், லோகேஷ், மனோகரன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் சு.வன வேந்தன் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *