2009ஆம் ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டு வரை தண்டவாளங்களைக் கடக்க முயன்ற 186 யானைகள் ரயில் மோதி இறந்தன

1 Min Read

புதுடில்லி, ஆக.5 ரயில் பாதைகளை கடக்க முயன்ற போது அடிபட்டு 186 யானைகள் உயிரிழந்துள்ளன என்று மத்திய வனத்துறை அமைச்சகம் தெரிவித் துள்ளது.  இதைத் தடுப்பது தொடர்பான ஆய்வை ஒன்றிய வனத்துறை அமைச்சகம் முன்னெடுத்தது.

186 யானைகள் பலி

இதுதொடர்பான ஆய்வுகள் முடிந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நமது நாட்டில் 2009-1200-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை ரயில்பாதைகளை கடக்க முயன்ற 186 யானைகள் அடிபட்டு இறந்துள்ளன. இதையடுத்து யானை வழித்தடங்களைக் கண்டறிந்து அந்தப் பகுதிகளில் பாலம், அல்லது யானைகள் அடிபடாதவாறு செல்வதற்கான வனத்தைப் போன்ற அமைப்பு போன்றவற்றை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 14 மாநிலங்களில் செல்லும் 127 ரயில்பாதைகளில் சுமார் 3,452 கிலோமீட்டர் தூரத்துக்கு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

ஒன்றிய சுற்றுச்சூழல், ரயில்வே அமைச்சகங்களும், மாநில வனத்துறை அமைச்சகங்களும் இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளன. இதன்மூலம் யானைகள் ரயில்பாதைகளை கடக்கும் இடங்களில் உயர்மட்ட ரயில்பாதைகள் அமைத்தல், நீர்வடிகால் அமைத்தல் போன்ற பணிகளைச் செய்ய பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான பணிகளை முன்னெடுத்துச் செல்லவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *