தமிழர் தலைவரின் அன்புக் கட்டளையை நிறைவேற்றிட கழகப் பொறுப்பாளர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

1 Min Read

‘மாமன்னன் கரிகாலனின் சாதனைக்கு ஈடு இணை யார்?’ என்ற தலைப்பில் தலைமைக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள துண்டறிக்கைகளை நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பரப்பிட வேண்டும் என்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டளையை செயல்படுத்தும் வகையில் கழக இளைஞர் அணி பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி அனைவருக்கும் கிராம பகுதிகளில் துண்டறிக்கையை பரப்புரை நிகழ்ச்சி நிரலை தயார் செய்து மாவட்ட தலைவர், செயலாளர்களின் வழிகாட்டுதலோடு உடனடியாக களப்பணியில் இறங்கிடுமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.

மாவட்டத் தலைவர், செயலாளர்கள் தங்கள் மாவட்டத்திற்கு தேவைப்படும் துண்டறிக்கையினை கீழ்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அதற்கான தொகையினை செலுத்தி உடனடியாக பெற்றுக்கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு – அவசரம் அவசியம்

(இவ்வாரத்திற்குள் முழுவதும் துண்டறிக்கை பரப்பிட வேண்டும் என்பது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அன்பு கட்டளை ஆகும்)

தலைமைக் கழகத்தில் துண்டறிக்கையை பெற்றுக்கொள்ள தொடர்பு கொள்ள
வேண்டிய தொலைபேசி எண்
7639818254, 8300393816, 9578896822

– நாத்திக பொன்முடி
மாநிலச் செயலாளர்,
திராவிடர் கழக இளைஞரணி

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *