பெரியார் மருந்தியல் கல்லூரியில் மருந்து கண்டுபிடிப்பு தொடர்பான ஒருநாள் பயிற்சிப்பட்டறை

1 Min Read

திருச்சி, ஆக.3- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் மருந்து கண்டுபிடிப்புக்கள் குறித்த கருத்தரங்கம் மருந்தாக்க வேதியியல் துறையின் சார்பில் 30.072025 அன்று காலை 10 மணியளவில் நடை பெற்றது. பெரியார் மருத்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தலைமையில் நடைபெற்ற துவக்கவிழா நிகழ்ச்சியில் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் வேதியியல் துறைத் தலைவர் முனைவர்
ஏ.ஜாபர் அகமது மருந்து கண்டுபிடிப்பில் நவீன முறைகள் குறித்து மாணவர்கள் மத்தியில் விளக்கினார். மேலும் மருந்து கண்டுபிடிப்பில் உள்ள பல்வேறு படிகளை விளக்கி, பெருகிவரும் நோய்களுக்கேற்ப குறைந்த விலையில் தரமான மருந்துகளை ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கண்டுபிடிப்பது ஒவ்வொரு மருந்தாளுநர்களின் கடமை என்றும் கேட்டுக்கொண்டு மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.

நிறைவில் மருந்தாக்க வேதியியல் துறை பேராசிரியர் எம்.கே.எம்.அப்துல் லத்தீஃப் நன் றியுரையாற்றினார். இக்கருத்தரங்கில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கு கொண்டு பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *