அரியலூர் மாவட்ட அளவிலான மட்டைப்பந்து போட்டியில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் வெற்றி

1 Min Read

ஜெயங்கொண்டம், ஆக.3- “சென்னை சூப்பர் கிங்ஸ்” மற்றும் “அரியலூர் மாவட்ட மட்டைப்பந்து கழகம்” இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான மட்டைப்பந்து போட்டிகள் ஜெயங்கொண்டம் மகிமைபுரம் மாடர்ன் கல்லூரியில் நடைப்பெற்றது.

அதில் பல்வேறு பள்ளி யிலிருந்து அணிகள் பங்கு பெற்றன. இதில் பெரியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்து வெற்றி பெற்றனர்.

மேலும் பன்னி ரெண்டாம் வகுப்பை சேர்ந்த ராகுல் என்ற மாணவன் சிறந்த மட்டைப் பந்து வீரர் (பேட்ஸ்மேன்) மற்றும் சிறந்த பந்து வீச்சாளர் (பவுலர்) என்ற கோப்பையை பெற்று மேலும் பள்ளிக்கு பெருமை சேர்த்தார். போட்டியில் வென்ற வீரர்களை பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கே.ராஜேஷ் ஆர்.ரவிசங்கர் மற்றும் ஆர்.ரஞ்சனி ஆகியோரைப் பள்ளி தாளாளர்இ முதல்வர் ஆர். கீதா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *