செய்திச் சுருக்கம்

1 Min Read

கடக்கும்

அரபிக் கடலில் நிலவிய ‘பிப்பர் ஜாய்’ அதிதீவிரப் புயலாக வலுப் பெற்று, வரும் 15ஆம் தேதி குஜராத் மாநிலம் மாண்டவி மற்றும் பாகிஸ்தான் கராச்சி கடற்கரைப் பகுதிகளில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மய்யம் தகவல்.

சாதனம் வழங்கல்

ஆங்கில மொழி ஆய்வகங்கள் இயங்கி வரும் 6,029 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் களின் பயன்பாட்டுக்கு ஹெட்ஃபோன் சாதனங்கள் கல்வித்துறை சார்பில் வழங்கப்பட உள்ளன.

கழிவுநீர்

கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்களை இறக்கினால் 14420 என்ற தொலைபேசி எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

திறனாய்வு

அரசுப் பள்ளிகளில் 5ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் நிலை குறித்து அறிவதற்கான திறனாய்வுத் தேர்வு ஜூன் 21ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் நடத்தப்பட உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *