அமெரிக்க வரிவிதிப்பு டிரம்ப் அறிவித்த 15 நிமிடங்களில் 5 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்

1 Min Read

மும்பை, ஆக. 1- இந்தியாவுக்கான இறக்குமதி வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் 25 சதவீதமாக நேற்று முன்தினம் (30.7.2025) இரவு அறிவித்தார். இதனால் இந்திய பங்குச்சந்தைகள் நேற்று  (31.7.2025) பலத்த சரிவுடனே தொடங்கின. அதிகப்பட்சமாக மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிவு தொடங்கியது.

தேசிய பங்குச்சந்தை குறியிட்டு எண் ‘நிப்டி’ 150 புள்ளிகள் வரை சரிந்தன. இதனால் இந்திய முத லீட்டாளர்களுக்கு பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கி 15 நிமிடங்களில் ரூ.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

கரோனா ஊரடங்கு அறிவிப்பு, 2017 பணமதிப்பு இழப்பு அறிவிப்பை தொடர்ந்து இத்தகைய சரிவை இந்திய பங்குச்சந்தைகள் நேற்று சந்தித்தன. 15 நிமிடங்களுக்கு பிறகு இந்திய பங்குச்சந்தைகள் எழுச்சி பெற தொடங்கின. இதனால் முதலீட்டாளர்கள் சிறிது நிம்மதி அடைந்தனர். ஆனால் நேற்று முன்தின முடிவுகளுடன் ஒப்பிடும்போது பங்குச்சந்தைகளில் சரிவே மிஞ்சின.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ 296 புள்ளிகள், அதாவது 0.36 சதவீதம் 81 ஆயிரத்து 105 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. தேசிய பங்குச்சந்தையான ‘நிப்டி’ 86 புள்ளிகள் (0.35 சதவீதம்) சரிந்து 24 ஆயிரத்து 768 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *