குறிஞ்சிப்பாடி ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் செந்தில் வேல் – மகளிர் அணி பொறுப்பாளர் சத்தியவதி ஆகியோரின் புதிய இல்ல அறிமுக விழாவை 9.6 .2023 அன்று காலை 11 மணி அளவில் அப்பியம்பேட்டையில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தலைமை ஏற்று திறந்து வைத்தார். மாவட்ட இளைஞர் அணி தலைவர் உதயசங்கர் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட தலைவர் சோ தண்டபாணி, மாவட்ட செயலாளர் எழில் ஏந்தி, மாவட்ட அமைப்பாளர் மணிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் மாநகரத் தலைவர் என் சிவகுமார், வடக்குத்து தர்மலிங்கம், திராவிடன், தெற்கு சேப்பளாநத்தம் உத்தண்டி, கடலூர் மாதவன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வேலு, அமைப்பாளர் டிஜிட்டல் ராமநாதன், கடலூர் மாதவன், திமுக செயலாளர் தட்சிணாமூர்த்தி, கிளைக் கழக தலைவர் தனசேகரன், வேகாகொல்லை வேணுகோபால், கதிர்வேலு, குறிஞ்சிப்பாடி நகரத் தலைவர் கனகராஜ், மகளிர் அணி பொறுப்பாளர்கள் தமிழ் ஏந்தி, குணசுந்தரி ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர் வழக்குரைஞர் வான்மதி நன்றி கூறினார். கொள்கை பரப்புரை நிகழ்ச்சியாக புதிய இல்ல அறிமுக விழா நடைபெற்றது. கழகக் கொடி உயர்த்தப்பட்டது.
குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக செயலாளர் செந்தில்-சத்தியா புதிய இல்ல அறிமுக விழா!
1 Min Read
வரலாற்று நிகழ்வு
நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு
பொன்மொழிகள்
தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.
நல்ல நேரம்: 24 மணி நேரமும்
மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
