பொன்னேரி நகர திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் தஞ்சை இரா.பெரியார்செல்வன் சிறப்புரை

1 Min Read

அரசியல்

பொன்னேரி, ஜூன் 13- கும்மிடிப்பூண்டி மாவட்டம் பொன்னேரியில் கழகம் சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா மற்றும் ‘திராவிட மாடல்’ விளக்க தெருமுனை கூட்டம் 10.6.2023 மாலை 6 மணியளவில் பொன்னேரியில் உள்ள அறிஞர் அண்ணா சிலை முன்பு நடைபெற்றது.

மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் கெ.முருகன் தலைமையில்  பொன்னேரி நகர செயலாளர் மு.சுதாகர் வரவேற்றார்.

மாவட்ட திராவிட மகளிர் பாசறை தலை வர் கு.செல்வி, செயலாளர் மா.இளையராணி, செ. உதயகுமார், பொன்னேரி விடுதலை வாசகர் வட்ட தலைவர் வழக்குரைஞர் கே.மூர்த்தி, மகளிரணி மாவட்ட செயலாளர் ச.நதியா, பொதுக்குழு உறுப்பினர் ந.கசேந் திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன் னீர் செல்வம் தொடக்கவுரை ஆற்றினார்.

மாவட்ட இளைஞரணி தலைவர்  சோழ வரம் ப.சக்கரவர்த்தி, திராவிட இயக்க தமிழர் பேரவை மாவட்ட தலைவர் க.சூரியா, மாணவர் ஜ.தமிழ் அரிமா உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர். கழக பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் சிறப்புரை ஆற்றி னார். பொன்னேரி நகர தலைவர் வே.அருள் நன்றி கூறினார். கும்மிடிப்பூண்டி மாவட்ட தலைவர் புழல் த. ஆனந்தன், கும்மிடிப்பூண்டி மாவட்ட செயலாளர் ஜெ.பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *