மலேசியாவில் பிரதமர் அன்வர் இப்ராஹிம் பதவி விலகக் கோரி பிரமாண்ட ஆர்ப்பாட்டம்

1 Min Read

கோலாலம்பூர், ஜூலை 28-  மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள டத்தாரன் மெர்டேகா (Dataran Merdeka) எனும் சுதந்திரச் சதுக்கத்தில் 26.7.2025 அன்று பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு, பிரதமர் அன்வர் இப்ராஹிம் பதவி விலகக் கோரி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்த இந்தப் பேரணியில் மேனாள் பிரதமர்களான டாக்டர் மகாதீர் முகமது மற்றும் முஹிதீன் யாசின் ஆகியோர் உரையாற் றினர். பிரதமர் அன்வர் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறை வேற்றவில்லை என்றும், நாட்டில் விலைவாசி அதிகமாக உள்ளது என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.

கடந்த சுமார் பத்தாண்டுகளில் மலேசி யாவில் பதவியில் இருக்கும் ஒரு பிரதமருக்கு எதிராக நடந்த மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் இதுவாகும். எதிர்க்கட்சியான பிஏஎஸ் கட்சி 3,00,000 பேர் கூடுவர் என்று எதிர்பார்த்தது. இருப்பினும், காவல் துறையின் கூற்றுப்படி, சுமார் 15,000 பேர் மட்டுமே திரண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *