5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்கள்

2 Min Read

புதுடில்லி, ஜூன் 14 –  மிசோரம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மத் தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ் தான் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்த மாநிலங்களில் அதிகாரி களின் இடமாற்றம் தொடர்பாக அந்தந்த மாநிலங்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறது.

இது தொடர்பாக அந்த மாநி லங்களின் தலைமை செயலாளர் களுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மிசோரம் சட்டசபையின் ஆயுட் காலம் வருகிற டிசம்பர் 17ஆம் தேதி யும், சத்தீஷ்கார், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் சட்டசபை பதவிக் காலம் ஆடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலும் நிறைவடைகின்றன.  தேர்தல் நடைபெற உள்ள ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசங்களில் தேர்தலுடன் தொடர் புடைய அதிகாரிகள் தங்கள் சொந்த மாவட்டம் அல்லது ஒரே இடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் பணியில் அமர்த்தப்படக் கூடாது என்ற நிலையான கொள் கையை தேர்தல் ஆணையம் பின்பற்றி வருகிறது.

அதன் அடிப்படையில் தேர்த லுடன் நேரடியாக தொடர்புடைய எந்த அதிகாரிகளும் தற்போது பணிபுரியும் மாவட்டம் (வருவாய் மாவட்டம்) அவர்களது சொந்த மாவட்டமாக இருந்தால் அதில் தொடர அனுமதிக்கக்கூடாது. 

இதைப்போல தற்போது பணி புரியும் மாவட்டத்தில் 3 ஆண்டுகள் நிறைவு செய்தவர்கள் அல்லது வருகிற 31ஆம் தேதி (மிசோரம்) அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதிக்கு முன் 3 ஆண்டுகளை நிறைவு செய்பவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும். 

தேர்தல் கமிஷனின் இந்த அறிவு றுத்தல்கள் காவல்துறை தலைவர்கள், துணைத் தலைவர்கள், மாநில ஆயுதப் படை கமாண் டர்கள், எஸ்.எஸ்.பி.க்கள், கண்காணிப்பாளர்கள், கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர்கள், ஆய் வாளர்கள், துணை ஆய்வாளர்கள் போன்ற காவல்துறை அதிகாரி களுக்கும் பொருந்தும்.

கடந்த காலங்களில் தேர்தல் ஆணையத்தால் ஒழுங்கு நடவடிக் கைக்கு பரிந்துரைக்கப்பட்ட அதிகாரி களுக்கு எந்த காரணம் கொண்டும் தேர்தல் தொடர்பான பணிகள் ஒதுக் கக்கூடாது. இதைப்போல நீதிமன்றங் களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கும் எந்த அதி காரிக்கும் தேர்தல் பணிகளோ, அது சார்ந்த பணிகளோ வழங்கக் கூடாது. இவ்வாறு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத் தில் கூறப்பட்டு உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *