வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!

Viduthalai
3 Min Read

விதி மீறி பயணித்தால் நவீன கண்காணிப்பு ரோந்து வாகனங்கள் படம் பிடித்து அபராதம் விதிக்கும்

சென்னை, ஜூன் 14 – சென்னையில் போக்குவரத்து காவல்துறைக்கு கடந்த மாதம் 31ஆம் தேதி அன்று 2 நவீன நடமாடும் கண்காணிப்பு வாகனங்களை அறிமுகம் செய் தனர். இந்த வாகனங்களில் 360 டிகிரி சுழலக்கூடிய ஏ.என்.பி.ஆர். நவீன ரக கண்காணிப்பு கேமராக் கள் பொறுத்தப்பட்டுள்ளது.  இதில் ஒரு வாகனத்தின் மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும்.

தற்போது சென்னை தெற்கு மண்டல போக்குவரத்து காவல் துறையும், கிழக்கு மண்டல போக்கு வரத்து காவல்துறைக்கும் இந்த வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 31ஆம் தேதி அன்று இந்த வாகனங்களின் செயல்பாட்டை கொடியசைத்து காவல் ஆணையர்  சங்கர் ஜிவால் தொடங்கி வைத் தார். இந்த வாகனங்களில் பொருத் தப்பட்டுள்ள சுழலும் கேமராக்கள் விதிகளை மீறி வாகன ஓட்டிகள் செய்யும் தவறுகளை தத்ரூபமாக படம் பிடிக்கிறது.

இந்த வாகனங்களில் பொருத் தப்பட்டுள்ள நவீன கருவியில் 12 வகையான விதிமீறல்கள் பற்றியும், அதற்கான அபராத தொகைகள் பற்றியும் விவரங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளது.

உதாரணமாக ‘தலைக்கவசம்’ அணியாமல் செல்வது, ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் செல்வது, அலைபேசி பேசியபடி வாகனங்களை ஓட்டி செல்வது, அதிவேகமாக வாகனங்களை இயக்குவது போன்ற விதிமீறல்கள் குறித்து இந்த வாகனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிமீறல் களை மீறும் வாகனங்களை படம் பிடிக்க ‘2 டி ரேடார்’ அமைப்பு இந்த வாகனத்தில் உள்ளது.

விதிமீறல்களில் ஈடுபடும் வாக னங்களை இந்த ‘ரேடார்’ கருவிகள் நவீன கேமரா மூலம் படம் பிடித்து அந்த வாகனங்களின் பதி வெண்ணை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி சரி பார்க்கும். உடனடியாக குறிப்பிட்ட வாக னத்தின் பதிவெண்ணை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட் டரில் உள்ள ஆவணத்திலும் ஆய்வு செய்யும்.

அதன் மூலம் குறிப்பிட்ட வாக னத்தின் உரிமையாளரின் முகவரி மற்றும் அலைபேசி எண்ணை கண்டுபிடிக்கும். அடுத்து இந்த தகவல் தேசிய தகவல் ஆணையத் துக்கும் அனுப்பி வைக்கப்படும். இதைத்தொடர்ந்து விதிமீறலுக் கான அபராத தொகைக்கான 

‘இ-சலான்’ குறிப்பிட்ட வாகன ஓட்டியின் அலைபேசி எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) மூலம் அனுப்பி வைக்கப்படும்.

படம் பிடித்தவுடன் இந்த அப ராத சலான் வாகன ஓட்டிகளின் அலைபேசி எண்ணுக்கு சென் றடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று போக் குவரத்து காவல் அதிகாரிகள் தெரிவித்தனர். தென்னிந்தியாவிலேயே சென்னையில்தான் இது போன்ற நவீன கண்காணிப்பு கேமரா வாக னங்கள் முதன் முறையாக அறி முகம் செய்யப்பட்டுள்ளது என் றும் காவல்துறை அதிகாரிகள் பெருமிதத்துடன் கூறினார்கள். 

இது போன்ற அதிரடியாக அபராத சலான் அனுப்பும் புதிய முறை வாகன ஓட்டிகளை அலற வைத்துள்ளது. நாம் இது போன்ற விதிமீறல் குற்றத்தில் ஈடுபட் டோமா? என்று வாகன ஓட்டி களை அதிர்ச்சி அடைய வைக் கிறது. ஆனால் உரிய புகைப்பட ஆதாரத்தோடு அபராத சலான் அனுப்பப்படுவதால் வாகன ஓட்டி களால் இந்த தொகையை கட்டு வதை தவிர வேறு வழியில்லை. 

இந்த 2 கண்காணிப்பு வாகனங் களில் ஒன்று கிழக்கு கடற்கரைச் சாலையில் ரோந்து சென்று கொண்டிருக்கும். இன்னொரு வாகனம் மெரினா கடற்கரை காம ராஜர் சாலையை கண்காணிக்கிறது. விரைவில் இது போன்ற நவீன ரோந்து வாகனம் வடக்கு மண்ட லத்திலும் செயல்பாட்டுக்கு வரும் என்று போக்குவரத்து காவலர்கள் தெரிவித்தனர். கடந்த 31-ஆம் தேதி அன்று இந்த 2 வாகனங்களும் தங்களது கண்காணிப்பு வேலையை தொடங்கியது.

12.6.2023 அன்று வரையில் இந்த கண்காணிப்பு வாகனங்களின் வலை யில் 3 ஆயிரத்து 374 வாக னங்கள் சிக்கி உள்ளன. உடனடி யாக அந்த வாகன ஓட்டிகள் செய்த விதிமீறலுக்கு அப ராத தொகையுடன் ரசீது அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு இந்த நவீன கண் காணிப்பு ரோந்து வாகனங்கள் ஒரு சவாலாகவே விளங்குவதாக அறியப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *