கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகள் நியமனத்தில் ஒன்றிய அரசு தாமதம் மூத்த வழக்குரைஞர்கள் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்

2 Min Read

புதுடில்லி, ஜூலை25- உச்ச நீதிமன்றத்தின் கொலீ ஜியம் பரிந்துரைக்கும் வழக்குரை ஞர்கள் நீதிபதிகளாக நியமனம் செய்யப்படுவர். இதன் பரிந்துரைப் படியே உயர்நீதிமன்ற நீதிபதிகளும் மாற்றம் செய்யப்படுகின்றனர்.

நீதிபதிகள் நியமனம்

இந்த பட்டியலில் ஒன்றிய அரசு சிலரது பெயர்களை மட்டுமே தேர்வு செய்கிறது. மற்றவர்கள் நீதிபதிகளாக நியமனம் செய்யப்படுவதில்லை. கடந்த 2019, 2020, 2022-ஆம் ஆண்டில் பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட சில நீதிபதிகளின் பெயர்களுக்கு தற்போது வரை ஒப்புதல் அளிக்கப் படவில்லை.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மூத்த வழக்குரைஞர்கள் அரவிந்த் தாதர், பிரசாந்த் பூஷன் ஆகியோர் 2 வாரங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இதை மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதபதி வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று (24.7.2025) விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்குரைஞர் அரவிந்த் தாதர் வாதிடுகையில் கூறியதாவது: கடந்த 2019-ஆம் ஆண்டில் இருந்து கொலீஜியம் பரிந்துரைந்த நபர்களுக்கு தற்போது வரை ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இந்த விஷயத்தில் முடிவு எடுக்க ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயம் செய்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் கடந்த 4 ஆண்டுகளாக ஒன்றிய அரசு தாமதம் செய்வதை பரிந்து கொள்ள முடியவில்லை. இதனால் பணி மூப்பு இழப்பு ஏற்படுவதால், டில்லி, மும்பையில் இருந்து பரிந்துரை செய்யப்பட்ட பல வழக்குரைஞர்கள் ஆர்வம் இழந்து தங்கள் பெயரை நீதிபதிகள் பரிந்துரை பட்டியலில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்கின்றனர்.

விசாரணைக்கு ஏற்பு

இந்த தாமதம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணை பட்டியலில் இருந்து திடீரென நீக்கப்பட்டன. இது குறித்து சில வழக்குரைஞர்கள் கேள்வி எழுப்பியபோது, கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி பதில் அளித்த அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், ‘‘சில விஷயங்களை பற்றி எதுவும் கூறாமல் அப்படியே விட்டுவிடுவதுதான் சிறந்தது’’ என கருத்து தெரிவித்தார்.

வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் வாதிடுகையில், ‘‘டில்லியைச் சேர்ந்த ஒரு பெண் வழக்குரைஞர் தேசிய சட்டப் பள்ளியில் முதல் ரேங்க் பெற்றவர். அவரது பெயர் நீதிபதியாக பரிந்துரை செய்யப் பட்டதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. நீதிபதிகள் நியமனம் விஷயம் ஒன்றிய அரசு தாமதம் செய்வது தொடர்ந்து நடை பெறுகிறது’’ என்றார். இதையடுத்து இந்த மனுக்களை விசாரிப்பதாக நீதிபதிகள் ஒப்புக் கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *