கரோனா பாதிப்பு: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்தது

Viduthalai
1 Min Read

அரசியல்

புதுடில்லி ஜூன் 15– நமது நாட்டில் தொடர்ந்து 2ஆவது நாளாக கரோனா பாதிப்பு 100-க்குள் அடங்கியது. 13.6.2023 அன்று 92 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. நேற்று (14.6.2023) இந்த எண்ணிக்கை 80 ஆகக் குறைந்தது. 

இதுவரை தொற்றால் பாதிக்கப் பட்டோர் மொத்த எண் ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 92 ஆயிரத்து 960 ஆக அதிகரித் துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 181 பேர் குணம் அடைந்தனர். இதுவரை குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 58 ஆயிரத்து 820 ஆகும்.தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 102 குறைந்தது. இதையடுத்து தொற்று மீட்பு சிகிச்சை பெறு வோர் எண்ணிக்கை 2,248 ஆகக் குறைந்துள்ளது. தொற்றினால் நேற்று முன்தினம் ஒருவர் கூட இறக்கவில்லை. நேற்றும் அதே நிலை நீடித்தது. ஆனாலும் கேர ளாவில் விடுபட்ட கரோனா பலிகளில் ஒன்றைக் கணக்கில் கொண்டு வந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 892 ஆனது. 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *