கொரிய விமான விபத்தில் 173 பேர் உயிரிழப்பு பறவை மோதியதால்தான் விபத்து ஏற்பட்டது புலனாய்வுக்குழுத் தகவல்

1 Min Read

சியோல், ஜூலை 23- தென் கொரியாவில் 2024 டிசம்பர் மாதம் விபத்துக்குள்ளான ஜெஜு ஏர் பயணிகள் விமானம் பறவை மோதியதாலேயே விபத்துக்குள்ளானதாக அந்நாட்டுப் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 29 அன்று தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தென்கொரியாவின் முவான் நகருக்கு 175 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் வந்துகொண்டிருந்த ஜெஜு ஏர் AI5744 விமானம், முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது.

விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையின்படி, விமானத்தின் இரண்டு என்ஜின்களிலும் இருந்த இறகுகள் மற்றும் இரத்தக் கறைகள், பைக்கால் டீல் (Baikal Teal) என்ற இடம்பெயர்ந்த வாத்து வகையைச் சேர்ந்தவை எனத் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையிலேயே பறவை மோதியமையே விபத்திற்குக் காரணம் எனப் புலனாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பன்னாட்டு ஊடகங்களில் வெளியான காணொலிகளில், விமானம் ஓடுபாதையில் சறுக்கிச் சென்று சுவரில் மோதி, பின்னர் தீப்பிடிப்பது பதிவாகி யுள்ளது. இந்தத் துயர விபத்தில் 179 பேர் உயிரிழந்தனர்.

இரண்டு விமானப் பணியாளர்கள் மட்டுமே உயிர் பிழைத்ததாகக் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *