ரயிலிலும், ரயில் நிலையத்திலும் விற்பனையாளர்களுக்கு இனி அடையாள அட்டை: ரயில்வே அமைச்சகம் உத்தரவு

1 Min Read

புதுடில்லி, ஜூலை 21- ரயில்வே அமைச்சகம் நாடு முழுவதும் அனைத்து ரயில்வே மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

ரயில் மற்றும் ரயில் நிலையங் களில் பல்வேறு சேவைகளை வழங்க உரிமம் பெற்ற நிறுவனங்களின் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள், உதவியாளர்கள், ஊழியர்களுக்கு ரயில்வே நிர்வாகம் அல்லது அய்ஆர்சிடிசியால் தரப்படுத்தப்பட்ட அடையாள அட்டைகளை வழங்க வேண்டும். அடையாள அட்டையில் ஊழியரின் பெயர், ஆதார் எண், மருத்துவ தகுதி சான்றிதழ் மற்றும் அதன் செல்லுபடியாகும் தேதி, காவல்துறை சரிபார்ப்பு தேதி, உரிமம் பெற்ற நிறுவனத்தின் பெயர் ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும்.
அந்தந்த நிலையத்தின் நிலைய கண்காணிப்பாளர் அல்லது நிலைய மேலாளர் அல்லது அய்ஆர்சிடிசியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் கையொப்பம் இடம் பெற்றிருக்க வேண்டும். அடையாள அட்டையை காட்டாமல் விற்பனை செய்ய எந்த விற்பனையாளரும் அனுமதிக்கப் படக்கூடாது. இது உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *