பூங்காவுக்கு ஒதுக்கிய இடத்தை சாலை அமைக்க பயன்படுத்த முடியாது உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்

1 Min Read

சென்னை, ஜூலை 20 பூங்காவுக்கு ஒதுக்கிய இடத்தை சாலை அமைக்க பயன்படுத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், தொழு வூரில் சபரிநகர் மனை பிரிவுக்கு சாலை வசதி அமைத்து தர உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மக்களுக்காக பூங்காவுக்கு ஒதுக்கிய இடத்தில் சாலை அமைக்க அனுமதிக்க முடியாது என்று பி.டி.ஓ. கூறியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டது.

வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க தேவையில்லை என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட நிலையில், மாவட்ட ஆட்சியரின் முடிவு குறித்து மனு தாரருக்கு தகவல் தெரிவிக்க உத்தர விட்டு வழக்கை முடித்து வைத்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *