பிஜேபி கூட்டணி ஆளும் பீகாரில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! பட்டப்பகலில் மருத்துவமனைக்குள் நுழைந்து நோயாளி சுட்டுக்கொலை

1 Min Read

பாட்னா,  ஜூலை 18  பீகார் மாநிலத்​தின் பக்​ஸர் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் சந்​தன் மிஸ்​ரா. இவர் மீது பல கொலை வழக்​கு​கள் உள்பட 30-க்​கும் மேற்​பட்ட குற்ற வழக்​கு​கள் உள்​ளன. இவர் சமீபத்​தில் பக்​ஸர் சிறையி​லிருந்து பகல்​பூர் சிறைக்கு மாற்​றப்​பட்​டார். இவர் சிகிச்​சைக்​காக பரோலில் வெளிவந்து பாட்னா நகரில் உள்ள பரஸ்
மருத்​து​வ மனையில் சிகிச்சை பெற்று வந்​தார். இதையறிந்த இவரது எதிரிகள், மருத்து​வ​மனை​யிலேயே இவரை சுட்​டுக் கொல்லத் திட்​ட​மிட்​டனர்.

இந்​நிலை​யில் பரஸ் மருத்​து​வ​மனை​யில் நேற்று (17.7.2025) காலை 5 பேர் நுழைந்​தனர். சந்​தன் மிஸ்ரா சிகிச்சை பெறும் அறைக்குள் புகுந்த அவர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் சந்தன்மிஸ்ராவை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். இதில் குண்டு பாய்ந்த சந்தன் மிஸ்ரா, அதே இடத்தில் இறந்தார். கொலையாளிகள் மருத்துவமனைக்குள் நுழைந்த காட்சிப் பதிவு வைரலாக பரவியது.

இந்தக் கும்பல், சந்தன் மிஸ்​ராவுக்கு எதி​ராகச் செயல்படும் சந்தன் செரு தலமையி​லான ரவுடிகள் என காவல்துறையினர் அடை​யாளம் கண்​டு, ஒருவரை கைது செய்தனர். மற்றவர்​களை பிடிக்​கும் முயற்சியில் காவல்துறையினர்  தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளனர்.

இதுகுறித்து ராஷ்ட்​ரிய ஜனதா தள தலை​வர் தேஜஸ்வி  அளித்த பேட்​டி​யில், ‘பீகாரில் யாருக்​கும், எங்கும் பாதுகாப்பு இல்லை. அரசு ஆதர​வுடன் செயல்​படும் குற்​ற​வாளி​கள், மருத்​து​வ​மனை​யின் அய்சியு வார்​டுக்​குள் புகுந்து சிகிச்சை பெற்ற நபரை சுட்டுக் கொன்​றுள்​ளனர். 2005 ஆம் ஆண்​டுக்கு முன்பு இது போன்ற சம்​பவங்​கள் பீகாரில் நடை​பெற​வில்​லை” என்​றார்.

பீகார் துணை முதலமைச்சர் விஜய் சின்ஹா அளித்த பேட்​டி​யில், ‘‘இச்​சம்பவம் வாய்ப்புக் கேடானது.. இது குறித்து விசா​ரணை நடத்தப்படும். குற்​ற​வாளி​கள் தப்ப முடி​யாது. அவர்​களுக்குக் கடுமை​யான தண்டனை வழங்கப்படும் என முதலமைச்சர்  நிதிஷ் குமார் கூறி​யுள்​ளார்” என்​றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *