மகளிர் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு உதவி

Viduthalai
1 Min Read

தமிழ்நாடு

சென்னை, நவ.12- தாய்நலம், மாத விடாய் மற்றும் மனநலம் உள்ளிட்ட விசயங்களில் கவனம் செலத்த ஒமேகா சமூக தாக்கத்திற்கான மன்றம் துவங்கப் பட்டுள்ளது. 

இது பெண்களின் ஆரோக்கியத்தில் கவனம்  செலுத்தி, சமூக-பொருளாதார மேம்பாட்டுடன் சுகாதாரப் பாது காப்பையும் ஒருங்கிணைக்கிறது என்று  அதன் தலைமை நிர்வாகி அனுராக் மேத்தா தெரிவித்துள்ளார்.  நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் சுகா தாரப் பாதுகாப்பை அணுகு முறையாக கொண்டு மக்களை ஒருங்கிணைத்து,  பாதிப்பில் இருந்து  அவர்கள் குண மடைய உதவி செய்வோம் என்றும் அவர் கூறினார். 

மேலும் சமூக வளர்ச் சிக்கு உந்துசக்தியாக இருக்கும் பெண்களுக்கு சிறுகடன் மற்றும் திறன் மேம்பட்டு பயிற்சி மூலம் புதிய தொழில் முனை வோர்களை அவர்களை மாற்றவும் பயிற்சி அளிக்கி றது. 

இதற்கான துவக்க விழா  சமீபத்தில் காரைக்கால் அருகே தரங்கம்பாடியில் நடைபெற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *