கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பில் திண்ணை பரப்புரை

1 Min Read

அரசியல்

குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக நாகர்கோவில் பகுதியில் தோழர்கள் திண்ணை பரப்புரை செய்து வருகின்றனர். தந்தை பெரியார் , தமிழர் தலைவர் கி.வீரமணி ஆகியோருடைய நூல்களை பரப்புதல், பொதுமக்களிடம் திராவிடர்கழக கொள்கைகளை எடுத்துக் கூறுதல், கழகத்திற்கு புதிய உறுப்பினர் சேர்த்தல், குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு முகாமிற்கு இளைஞர்களை தயார் செய்தல் போன்ற பரப்புரைகளில் தோழர்கள் ஈடுபட்டுள்ளனர்.  இந்த நிகழ்ச்சிக்கு குமரி  மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் கழக பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், பகுத்தறிவாளர் கழக மாவட்டதலைவர் உ.சிவதாணு, செயலர் பெரியார் தாஸ், தொழிலாளரணி செயலாளர் ச.ச. கருணாநிதி, தோழர்கள் பா.சு முத்து வைரவன், ம.செல்வராசு, ச.ச.மணிமேகலை, பொன் எழில் அரசன்  மற்றும்  கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *