செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வார் – அரசாணை வெளியீடு
சென்னை, ஜூன் 17- செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடரு வதை விரும்பவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித் திருந்தார்.
இந்த சூழ்நிலையில் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச் சராகத் தொடர்வார் என்று தமிழ்நாடு அரசு சார்பில் அரசாணை வெளியி டப்பட்டுள்ளது.
“அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பில் இருந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை ஆகியவை அவரது உடல் நிலையின் காரணமாக, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின்சாரத் துறையும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைஅமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறையையும் பிரித்து வழங்கப்படுகிறது. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத (Minister without portfolio) அமைச்சராகத் தொடருவார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லணையிலிருந்து நீர் திறப்பு
தஞ்சாவூர், ஜூன் 17- டெல்டா பாசனத்துக்காக கல்ல ணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த ஆண்டு தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் 3.42 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண் ணீர் திறக்கப்பட்டது. இந்த ஆண்டு தஞ்சை, நாகை, திரு வாரூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் 3.42 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப் பட்டுள்ளது.
கல்லணைக்கு வந்த தண்ணீர்
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாய பணிகளுக்காக மேட்டூர் அணையில் இருந்து வழக்கம் போல் ஜூன் 12ஆம் தேதியோ அல்லது அதன் பிறகோ தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு வழக்கம் போல் டெல்டா பாசனத்துக்காக கடந்த 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்துவிட்டார். மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் தஞ்சை மாவட்டம் கல்லணையை 15.6.2023 அன்று மாலை வந்தடைந்தது.
திறப்பு
கல்லணைக்கு வந்த தண்ணீரை காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளில் பிரித்து வழங்குவதற்காக ஏற்கனவே கல்லணையில் உள்ள தலைப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட் டங்களின் பாசனத்துக்காக கல்லணை நேற்று (16.6.2023) காலை 9.45 மணியளவில் திறக்கப்பட்டது.
கல்லணையில் இருந்து வினாடிக்கு காவிரி, வெண் ணாறு, கொள்ளிடம் ஆகியவற்றில் தலா 500 கன அடி வீதமும், கல்லணை கால்வாயில் வினாடிக்கு 100 கன அடி வீதமும் தண்ணீரை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, எம்.பி.க்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், செ.ராமலிங்கம், எஸ்.கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் பொத்தானை அழுத்தி திறந்து வைத்தனர்.
ரஷ்ய மருத்துவ கல்வி கண்காட்சி
சென்னை, ஜூன் 17- 2023–2024-ஆம் கல்வியாண்டில் இந்திய மாணவர்களுக்கு 5000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களை ரஷ்ய மருத்துவப் பல் கலைக்கழகங்கள் வழங்க உள்ளன. வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், அகில இந்திய ரஷ்ய கல்விக் கண்காட்சி 2023-இன் இரண்டாவது பதிப்பு, சென்னையில் ரஷ்ய கலாச் சார மய்யத்தில் 17.6.2023 மற்றும் 18.6.2023 ஆகிய தேதிகளில் தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் ஜூன் 20-ஆம் தேதி ரெசிடென்சி ஹோட்டலிலும்; திருச்சியில் ஜூன் 21-ஆம் தேதி ஃபெமினா ஹோட் டலிலும்; சேலத்தில் ஜூன் 22-ஆம் தேதி ஜி. ஆர்.டி. ஹோட்டலிலும்; கோயம்புத்தூரில் ஜூன் 23-ஆம் தேதி தி கிராண்ட் ரீஜெண்ட் ஹோட்டலி லும் இக்கண்காட்சி நடை பெறவுள்ளது. இந்த நிகழ் வில் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளுக்கான நேரடி சேர்க்கையும் நடைபெறும்.
இக்கல்விக் கண்காட் சியில் பங்கேற்கும் ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் பின்வருமாறு: வோல் கோகிராட் மாநில மருத் துவப் பல்கலைக்கழகம், இம்மானுவேல் காண்ட் பால்டிக் ஃபெடரல் பல்கலைக்கழகம், கசான் மாநில மருத்துவப் பல் கலைக்கழகம், தேசிய ஆராய்ச்சி நியூக்ளியர் பல்கலைக்கழகம், குர்ஸ்க் ஸ்டேட் மருத்துவப் பல் கலைக்கழகம், மாஸ்கோ இயற்பியல் தொழில் நுட்ப நிறுவனம், ஹையர் ஸ்கூல் ஆஃப் எகனா மிக்ஸ் உள்ளிட்ட சில பல்கலைக் கழகங்கள் பங் கேற்கின்றனர்.
வெளிநாட்டு மருத்து வப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் எம்.பி.பி.எஸ். படிப்புகளை அங்கீகரிப்ப தற்காக, தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission – NMC) வெளியிட்டுள்ள சமீபத் திய நிபந்தனைகளை ரஷ்யா முழுமையாக பூர்த்தி செய்கிறது. ரஷ் யப் பல்கலைக்கழகங்க ளில் படித்து முடிக்கும் இந்திய மாணவர்கள் தங்கள் சொந்த நாட்டில் மருத்துவம் பார்ப்பதற்கு, அவர்கள் பெறும் பட்டங்களுக்கு என்.எம்.சி.-யின் அங்கீ காரம் இன்றிய மையாத ஒன்று.
இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு, மாணவர் கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9282 221 221 / 99401 99883.