திருப்புவனம். ஜூன் 18 – சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கொந்தகையில் 15 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.
திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் 9ஆ-ம் கட்ட அகழாய்வுப் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கி வைத்தார். இங்கு 4 குழிகள் தோண்டப்பட்டன. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பானை ஓடுகள், சேதமடைந்த பானைகள், மரக்கரி துகள்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, கொந்தகையில் நடைபெற்ற அகழாய்வுப் பணியில், ஒரே இடத்தில் 15 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. 2 அடியிலேயே தென்பட தொடங்கிய நிலையில், முழுமையாக தோண்டிய பின்னர் முதுமக்கள் தாழிகள் திறக்கப்படும், என தொல்லியல் துறை யினர் தெரிவித்தனர். இதனிடையே, கீழடி 9-ஆம் கட்ட அகழாய்வுப் பணி யில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள் ளது.