கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனைக்கு இயக்குநர் நியமனம்

0 Min Read

அரசியல்

சென்னை, ஜூன் 18 – சுகாதாரத்துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வந்த மருத்துவர் பார்த்தசாரதி, கிண்டி, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையின் இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனையின் முதல்வராக இருந்த டாக்டர் கே.நாராயணசாமி, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்பதவி காலியானது. அக்கல்லூரி முதல்வராக டாக்டர் முத்துச் செல்வன் நியமிக்கப்படுகிறார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *