கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 29.6.2025

Viduthalai

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தமிழ் நாட்டின் நலனுக்கு எதிரான ஒன்றிய அரசுக்கு அதிமுக துணை போகிறது, திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம். 2026 தேர்தல் வெற்றிக்கு 68000 டிஜிட்டல் வாரியர்ஸ் உருவாக்கியுள்ளது திமுக.

* ம.பி.யில் மாணவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம்; உச்சநீதிமன்றம் கண்டனம். விடுதலை செய்திட ஆணை.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* கூட்டாட்சி முறை இந்தியாவை சிதைக்கும் என்ற விமர்சனங்களுக்கு, அரசமைப்பு சட்டம் என்று நாட்டை ஒன்றுபடுத்தும் என அம்பேத்கரின் கருத்தை நினைவு படுத்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பேச்சு.

தி இந்து:

* மத்தியப் பிரதேசத்தில் 27% ஓபிசி இடஒதுக்கீடு: பாரதிய ஜனதா கட்சி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரானது என்று குற்றம் சாட்டிய காங்கிரஸ், சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் இருந்தபோதிலும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாஜக அரசு அரசுத் துறை மற்றும் நிறுவனங்களில் 27% இட ஒதுக்கீட்டினை  நிறைவேற்றுவதை வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருவதாக கண்டனம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பீகார் அரசியல்: என்.டி.ஏ. கூட்டணியில் நிதிஷ் குமாரை பின்னுக்கு தள்ளி சிராக் பஸ்வான் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதால், கூட்டணியில் சிக்கல்.

* பள்ளிகளில் உடற்பயிற்சி நடன வடிவமான ஜூம்பாவை கேரள அரசு அறிமுகப்படுத்தியது; ‘கல்வியிலிருந்து மதத்தை விலக்கி வைக்கவும்’ என எதிர்ப்பாளர்களுக்கு பதில்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* முகவுரையில் சோசலிசம், மதச்சார்பற்ற வார்த்தை சேர்ப்பு: ‘ஸநாதன உணர்விற்கு  எதிரானதாம்’: அரசமைப்பு சட்டத்தின் மேல் உறுதி ஏற்ற துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் பேச்சு

டைம்ஸ் ஆப் இந்தியா:

* வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர்களை நீக்க சதித்திட்டமா? எதிர்க்கட்சிகள் கண்டனம். மகாராஷ்டிரா தேர்தலை போல் பீகார், அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு தேர்தல்களை குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு.

 குடந்தை கருணா

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *