புதுடில்லி, ஜூன்.26- 10-ஆம் வகுப்பு மாண வர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் 2 முறை பொதுத்தேர்வு நடத்தப் படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்து உள்ளது.
2 முறை பொதுத்தேர்வு
பொதுத்தேர்வுகளின் பரபரப்பை குறைக்கும் நோக்கில் மாணவர்களுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என புதிய கல்விக்கொள்கை பரிந்துரைக்கிறது.
இதை அமல்படுத்தும் நோக்கில் சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் வரைவு விதிகளை உருவாக்கியது. இது பொதுமக்களின் கருத்து கேட்புக்காக கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த விதிமுறைகளை அமல் படுத்த சி.பி. எஸ்.இ. முடிவு செய்துள்ளது.
முதல் தேர்வு கட்டாயம்
இதில் முக்கியமாக 10-ஆம் வகுப்பு மாண வர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு நடத்த முடிவு செய் யப்பட்டு உள்ளது.அதன்படி பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் பொதுத் தேர்வு நடத்தப்படும். இது அடுத்த ஆண்டு (2026) முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இதில் பிப்ரவரி மாதம் நடைபெறும ்பொதுத் தேர்வை அனைத்து மாணவர்களும் எழுதவேண்டும்.அந்த வகையில் இது கட்டாய தேர்வு ஆகும்.
அதேநேரம் மே மாதம் நடை பெறும் தேர்வு விருப் பத் தேர்வு மட்டுமே. தங்கள் செயல் திறனை மேம் படுத்த விரும்பும் மாண வர்கள் இதை எழுதலாம்.
குறிப்பாக, கணிதம், அறிவியல், சமூக அறி வியல் மற்றும் மொழிப் பாடத்தேர்வு ஆகியவற்றில் ஏதேனும் 3 பாடங்களில் செயல் திறனை மேம் படுத்த மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் என சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப் பாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ் கூறினார்.
ஏப்ரல், ஜூனில் முடிவு வெளியீடு
குளிர் பிரதேசத்தில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவர்கள் எந்த தேர்வையும் எழுதலாம். பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நடத்தப்படும் பொதுத்தேர்வுக்கான முடிவுகள் முறையே ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் வெளியிடப்படும். 2 முறை பொதுத்தேர்வு நடத்தப்பட்டாலும், உள் மதிப்பீடு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும்.
10-ஆம் வகுப்புக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர் வுகளை நடத்துவதற்கான விதிமுறைகளை சி.பி.எஸ்.இ அங்கீகரித்துள்ளதாக சன்யம் பரத்வாஜ் கூறியுள்ளார்.