கிருஷ்ணகிரி, ஜூன் 24 த.வெ.க. தலைவர் விஜய் பிறந்த நாள் விழா வெட்டுக்குத்தில் முடிந்தது. இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பயங்கர மோத லில் 6 பேர் காயம் அடைந்தனர். கார் அடித்து நொறுக் கப்பட்டது.
போட்டா போட்டி
தமிழகவெற்றிக் கழகதலைவர் விஜய் பிறந்த நாள் விழா கொண் டாட்டத்தை யொட்டி, 22.5.2025 அன்று கிருஷ்ணகிரியில் நகர செயலாளர் சசிக்குமார் (வயது 35), சலீம் (31) ஆகியோர் நண்பர்களுடன் கீழ்புதூர் கிராமத்திற்கு வந்தனர். அங்குள்ள த.வெ.க. கொடிகம்பம் அருகில் மரக்கன்றுகள் நட முயன்றனர்.
அந்த நேரம் கீழ்புதூரை சேர்ந்த விஜய் என்ற நாகராஜ் (31) என்பவர் அங்கு வந்து, நான் இந்த பகுதி கிளை தலைவராக உள்ளேன். நிகழ்ச்சி நடத்துவதாக இருந்தால் என்னிடம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.
வாக்குவாதம்
அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகவல் அறிந்த கிருஷ்ணகிரி புதிய பாஞ்சாலியூரை சேர்ந்த ரவுடி தபு என்ற தப்ரீஷ் (26) என்ப வர் 10 பேருடன் அங்கு வந்து நாகராஜிடம் வாக்குவாதம் செய்தார்.
வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த அவர், தான் வைத்திருந்த கத்தியால் அங்கிருந்தவர்களை சரமாரியாக வெட்ட தொடங்கினார். இதில் அங்கு இருந்த அருண் (26), ஹரிராம் (22), பாரதியார் நகர் சஞ்சய் (22) ஆகிய 3 பேருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
வழக்குப் பதிவு
தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி பயங்கரமாக மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த மோதலில் இரு தரப்பை சேர்ந்த மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.சலீம் வந்த கார் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது.
புகாரின் பேரில் காவல் துறை பயங்கர மோதலில் ஈடுபட்ட இருதரப்பை சேர்ந்த 9 பேர் மீதுவழக்குப்பதிவு செய்தனர். இதில் விக்னேஷ், விஜய், முனி, வெங்கடேஷ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். தபு உள்பட மற்றவர்களை காவல் துறை தேடி வருகின்ற னர். கத்தியுடன் வந்த தபு மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும், காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.