திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: எச்.ராஜா விசாரணைக்கு ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

1 Min Read

சென்னை, ஜூலை 23 திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் மத மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக, எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் மதுரை சுப்பிர மணியபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணைக்காக
எச்.ராஜாவுக்கு காவல்துறை தாக்கீது அனுப்பியது.

இந்த தாக்கீதை எதிர்த்து பா.ஜ.க. மூத்த தலைவர் எச். ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (23.6.2025) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,விசாரணைக்கு ஆஜராகக்கூறி அனுப்பிய தாக்கீதை எதிர்த்து வழக்குத் தொடர முடியாது என்றும், விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைப்பு அளிக்குமாறும் எச்.ராஜாவுக்கு உத்தரவிட்டனர். மேலும் காவல்துறை அனுப்பிய தாக்கீதை எதிர்த்து எச்.ராஜா தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *