மருத்துவப் படிப்புகளில் சேர இதுவரை 60 ஆயிரம் விண்ணப்பம் இணைய வழியில் விண்ணப்பிக்க 25ஆம் தேதி கடைசி நாள்

1 Min Read

சென்னை, ஜூன் 22- நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான (2025-2026) மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுவரையில் 60 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து இருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் வரும் மருத்துவ மாணவர் சேர்க்கை குழு தெரிவித்து இருக்கிறது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற ஜூன் 25ஆம் தேதி ஆகும். மேலும் அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருக்காது என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப் படுகிறார்கள்.

விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான அவகாசம் வழங்குவதற்கான வாய்ப்பும் இல்லை என சொல்லப்படுகிறது. எனவே அதற்கு அவகாசம் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *