நான்கு மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் கேரளாவில் 73 சதவீத வாக்குகள் பதிவு

1 Min Read

புதுடில்லி, ஜூன் 20 கேரளா, குஜராத் பஞ்சாப். மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நேற்று (19.6.2025) இடைத்தேர்தல் நடைபெற்றது. கேரள இடைத்தேர்தலில் அதிகபட்சமாக 73 சதவீத வாக்குகள் பதிவானது.

கேரளாவில் நிலம்பூர். மேற்கு வங்கத்தில் காலிகஞ்ச், பஞ்சாபில் மேற்கு லூதியானா, குஜராத்தில் விசாவதர், காடி ஆகிய 5 தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது.

நிலம்பூரில் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் பி.வி.அன்வர், விசாவதரில் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் புபேந்திர பயானி ஆகியோர் தங்கள் பதவியிலிருந்து விலகிய  இடைத்தேர்தல் அவசிய மானது.

இதுபோல் காலிகஞ்ச் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் நசிருதீன் அகமது. மேற்கு லூதியானாவில் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்  குர்பிரீத் பஸ்ஸி, காடி தொகுதியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கர்சன் சோலங்கி ஆகியோர் மறைவால் இடைத்தேர்தலுக்கான கட்டாயம் ஏற்பட்டது. இத்தொகுதிகளில் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. ஒருசில அசம்பாவிதங்கள் தவிர வாக்குப் பதிவு பெரும்பாலும் அமைதியாக நடைபெற்றது.

மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டம் காலிகஞ்ச் தொகுதியில் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 69.85 சதவீத வாக்குகள் பதிவானது. இதுபோல கேரளாவின் நிலம்பூரில் 73.26 சதவீதமும், பஞ்சாப் மாநிலம் மேற்கு லூதியானாவில் 51.33 சதவீதமும், குஜராத் மாநிலம் காடியில் 64 சதவீதமும், விசாவதரில் 55 சதவீதமும் வாக்குகள் பதிவானது.

இத்தேர்தலில் முதல்முறையாக வாக்காளர்கள் தங்கள் அலைபேசிகளை வாக்குச் சாவடிக்கு வெளியே பாதுகாப்பாக வைத்துவிட்டுச் செல்லும் வசதியை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. வரும் ஜூன் 23-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *