வடுவூர் பாலம் அருகில் மீண்டும் தந்தைபெரியார் சிலை கழகப்பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் குவிந்தனர்

1 Min Read

அரசியல்

வடுவூர், ஜூன் 22 – தஞ்சாவூர் – மன்னார்குடி மாநில நெடுஞ்சாலை விரி வாக்கம் நடைபெறுவதை முன்னிட்டு  வடுவூர் பாலம் மேல் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலையை கிரேன் உதவியுடன் எடுத்து சாலையின் தென்பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட பீடத்தில் வைக்கும் நிகழ்ச்சி 17.06.23 சனிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கி 12 மணி வரை நடைபெற்றது.

அரசியல்

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக தலைவர்ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் மாவட்ட கழக செயலாளர் கோ.கணேசன், மாவட்ட இணை செயலாளர் வீ.புட்பநாதன், மாவட்ட ப.க. ஆசிரியரணி தலைவர் வீரமணி, மன்னை ஒன்றிய தலைவர் மு.தமிழ்செல்வம், எடமேலையூர் வீராசாமி, லெட்சுமணன், புள்ளவராயன்குடிகாடு கலியமூர்த்தி, ராய புரம் சக்திவேல், வடுவூர் ஆசைஒளி,  லோகநாதன் மற்றும் வடுவூர் தோழர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் வடுவூர் தி.மு.க. பொறுப்பாளர் தமிழ்மணி தேநீர் வழங்கி சிறப்பித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *