வடுவூர் பாலம் அருகில் மீண்டும் தந்தைபெரியார் சிலை கழகப்பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் குவிந்தனர்

Viduthalai
1 Min Read

அரசியல்

வடுவூர், ஜூன் 22 – தஞ்சாவூர் – மன்னார்குடி மாநில நெடுஞ்சாலை விரி வாக்கம் நடைபெறுவதை முன்னிட்டு  வடுவூர் பாலம் மேல் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலையை கிரேன் உதவியுடன் எடுத்து சாலையின் தென்பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட பீடத்தில் வைக்கும் நிகழ்ச்சி 17.06.23 சனிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கி 12 மணி வரை நடைபெற்றது.

அரசியல்

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக தலைவர்ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் மாவட்ட கழக செயலாளர் கோ.கணேசன், மாவட்ட இணை செயலாளர் வீ.புட்பநாதன், மாவட்ட ப.க. ஆசிரியரணி தலைவர் வீரமணி, மன்னை ஒன்றிய தலைவர் மு.தமிழ்செல்வம், எடமேலையூர் வீராசாமி, லெட்சுமணன், புள்ளவராயன்குடிகாடு கலியமூர்த்தி, ராய புரம் சக்திவேல், வடுவூர் ஆசைஒளி,  லோகநாதன் மற்றும் வடுவூர் தோழர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் வடுவூர் தி.மு.க. பொறுப்பாளர் தமிழ்மணி தேநீர் வழங்கி சிறப்பித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *