2 பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

1 Min Read

சென்னை, ஜூன் 15- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், சென்னை மாவட்டத்தில் ‘2 பெண் குழந்தை பாதுகாப்பு’ திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை பெற்று வழங்கிட விரிவாக்க அலுவலர் மற்றும் நகர் நல அலுவலர்கள் மூலம் பயனாளிகளை கண்டறிந்து ஆவணங்களை பெற்று ஆணையரகம் மூலம் தொகை பெற்று வழங்கப்பட்டு வருகிறது.

கண்டறிய இயலாத பயனாளிகள் விவரம் சென்னை மாவட்ட வலைத்தளத்தில் (chennai. nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் வைப்புத் தொகை பத்திரம் பெற்று 22 வயது மற்றும் அதற்கு மேல் பூர்த்தி அடைந்தும் முதிர்வுத்தொகை வேண்டி விண்ணப்பம் அளிக்காதவர்கள் தங்களின் வைப்புத்தொகை பத்திரம், வங்கிக் கணக்கு விவரம் (தனி கணக்கு), 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று ஆகிய ஆவணங்களுடன் சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்திலுள்ள விரிவாக்க அலுவலர் மற்றும் நகர் நல அலுவலர்களிடம் விண்ணப்பம் அளிக்கலாம், என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *