பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார் சிறப்புக் கருத்தரங்கம்

viduthalai
1 Min Read

பெரம்பலூர், ஜூன் 15- பெரம்பலூரில் “பெரியார் பேசுகிறார்” எனும் 10ஆவது மாதாந்திர கருத்தரங்கக் கூட்டம் 14.06.2025 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் மருத்துவர் குணகோமதி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் மு.விசயேந்திரன் வரவேற்புரையாற்ற, மாவட்ட காப்பாளர் ந.ஆறுமுகம், துரைசாமி, அண்ணாதுரை, ஆதி சிவம், ஆகியோர் முன்னிலையில் மாவட்டத்தலைவர் சி.தங்கராசு தலைமையில் “பெரியார் வழியில் கலைஞர்”எனும் தலைப்பில் வை.தேனரசன் சிறப்புரை ஆற்றினார்.

இக்கூட்டத்திற்குப் புதிய தோழர்கள் வருகை புரிந்தது சிறப்பாக இருந்தது.இராமர், கார்முகில், சாரதி, செல்வம், செல்வமணியன், முத்துசாமி, சிற்றரசு, வின்சென்ட்,கோபிநாத், சுரேஷ்குமார் மற்றும் பலர் வருகை புரிந்து கருத்துரைகளை கேட்டனர். ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *