அஞ்சாநெஞ்சன் அழகிரி பிறந்த நாள் இன்று [23.6.1900]

Viduthalai
3 Min Read

அரசியல்

நரம்பெல்லாம் இரும்பாகி நனவெல்லாம் உணர்வாகி எல்லோரையும் எரிமலையாக் கும் பேச்சு பட்டுக்கோட்டை அழகிரியினுடையது.

கதாகாலட்சேபம் செய்பவர்களைப் போல் நீட்டி – ராகம் போட்டு பேசுகின்ற பழைய மேடைத் தமிழ் மரபைத் தூக்கி எறிந்து, இன்றைக்கு எல்லாக் கட்சி மேடைகளிலேயும் புழக்கத்தில் இருக்கின்ற நவீனத் தமிழ்மேடைப் பேச்சினை அறிமுகப்படுத்தியவர் பட்டுக்கோட்டை அழகிரிதான்.  

பட்டுக்கோட்டை அழகிரி இப்படி செய்த அறிவிக்கப்படாத போராட்டங்களில் ஒன்று தான் தமிழிசை மேதை சிவக்கொழுந்து நாதசுரவித்வானுக்கு ஆதரவாக நின்றது. செட்டிநாட்டில் கடுமையான கோடைக்காலத் தில் நாதசுரம் வாசித்துக் கொண்டிருந்த சிவக்கொழுந்து வேர்வையைத் துடைப்ப தற்காக தோளில் ஒரு துண்டைப் போட்டி ருந்தார். அங்கிருந்த பார்ப்பன ஆதரவு சனாதானிகள் நாதசுரம் வாசிக்க வந்தவர் சூத்திரன். எனவே மேல் துண்டு அணியக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள். இது அழகு செய்யும் அங்கவஸ்திரம் அல்ல. வேர்வையைத் துடைப்பதற்காக போட்டிருக் கும் கைக்குட்டை தான் என்று சிவக்கொழுந்து சொன்னதை மேல் உயர்ஜாதி திமிர்பிடித்த வர்கள் கேட்கவில்லை. ‘துண்டை கீழே போடு’ என்று அடம்பிடித்தார்கள். “துண்டை எடுக்காவிட்டால் கலவரம் செய்வோம்” என்று மிரட்டினார்கள். நாதசுரத்தைக் கேட்டுக்கொண்டிருந்த நமது அழகிரியும் – அவருடைய நண்பர்களும் சிவக்கொழுந்து சொன்னதை ஏற்றுக் கொண்டார்கள். “துண்டை எடுக்கக் கூடாது என்று சொன் னார்கள். எடுத்தால் நாங்கள் கலவரம் செய்வோம் என்று மிரட்டினார்கள். மிரட்டல் அரவம் அடங்கிப் போனது. 

கானாடு காத்தானில் அப்பொழுது தங்கியிருந்த தந்தை பெரியாரிடம் அனுமதி பெற்று அஞ்சா நெஞ்சன் அழகிரி, போர்க் கொடி தூக்கி  இசைக் கலைஞரின் தன்மானத்தைக் காத்தார்.

பட்டுக்கோட்டை அழகிரியினுடைய பேச்சு எத்தனையோ பேருடைய மனம் திரும்புதலுக்குக் காரணமாக இருந்தது. அன்றைய முதலமைச்சர் இராசகோபாலாச் சாரியினுடைய கட்டாய ஹிந்தித் திணிப்பை எதிர்த்து திருச்சி உறையூரிலிருந்து ஒரு மாபெரும் ஹிந்தி எதிர்ப்புப் படை வழியெங் கும் பிரச்சாரம் செய்து கொண்டே  நடந்தே சென்னைக்கு வந்தது.

பல இடங்களில் அந்தப் படைக்கு பெரும் வரவேற்பும் – ஆதரவும் கிடைத்தன. எதிர்ப் புக்கும் பஞ்சமில்லை. ஓர் ஊரில் தேசிய தீவிரவாதிகள் செருப்புக்களை தோரண மாகக் கட்டித் தொங்க விட்டு ஹிந்தி எதிர்ப் புப் போராட்டத்துக்கு தங்கள் எதிர்பைக் காட்டினார்கள். கோபமுற்ற கழகத் தோழர்கள் தோரணம் கட்டியவர்களை தாக்கத் தயாரானார்கள். பட்டுக்கோட்டை அழகிரி இவர்களைத் தடுத்தார்.

“உனக்கும் எனக்கும் சொந்தமான நம் தமிழுக்கு வருகின்ற கேட்டை எதிர்த்து இந்த கொளுத்துகிற வெயிலில் பாதங்கள் கொப் பளிக்க நாங்கள் நடக்கிறோம். தோழனே! நீ தோரணமாய் கட்டியிருக்கின்ற செருப்புக் களை எங்கள் மீது தூக்கி வீசியிருந்தால் அதை எங்கள் காலில் போட்டுக் கொண்டாவது நடந்திருப்போம்” என்று தன்னுடைய பேச்சைத் துவக்கிய அழகிரி மேடை, ஒலிப்பெருக்கி இல்லாமல் அங்கே ஒரு உணர்வு பெருவெள்ளமாய் உரையாற்றினார். சிறிய கூட்டம் பெருங்கடலாயிற்று. அழகிரி தன் பேச்சை இப்படி முடித்தாராம்.

“இன்னும் சில காலம் கழித்து தோரணம் கட்டியவனும் நானும் செத்துப் போவோம். வருங்கால சந்ததிகள் எங்கள் சமாதி களையெல்லாம் பார்த்து எங்கள் மான வாழ்வுக்கு வழி வகுத்த தொண்டர்கள் என்று மலர் மாரி தூவுவார்கள்….. ஆனால் எங்களை இழிவு செய்கிற தோழனே! உன்னுடைய சமாதிக்கு உன்னுடைய சந்ததிகள் கூட வர மாட்டார்கள். காக்கையும் கழுகும் தான் எச்சமிட்டு விட்டுப் போகும்” என்றாராம். 

தோரணம் கட்டியவர்கள் கண்ணீர் மல்க வந்து அவர்கள் கையாலேயே செருப்புத் தோரணத்தை அவிழ்த்து எறிந்து விட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்களாம். அழகிரியின் வாழ்க்கையில் இப்படி நெஞ்சை நெகிழ வைத்த சம்பவங்கள் எத்தனை எத்தனையோ!!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *