‘தினமலரின்’ நாகரிகம்!

1 Min Read

கலைஞர் கோட்டம் திறப்பு விழாவிற்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் வராமல் போனதற்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தொலைப்பேசியில் வருத்தம் தெரிவித்து, நீண்ட வாழ்த்துக் கடிதம் அனுப்பினார். அதன் தமிழ்மொழி ஆக்கத்தை தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி என்.சிவா எம்.பி., உணர்ச்சி ததும்ப எடுத்துரைத்தார்.

இந்த நிலையில், இந்தச் செய்தியை பூணூல் ஏடான ‘தினமலர்’ எப்படி வெளியிடுகிறது?

‘‘உடல்நலம் சரியில்லை என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் லீவ் போட்டார். இதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது” என்று ‘தினமலர்’ செய்தி வெளியிடுகிறது என்றால், ‘தினமலரின்’ பார்ப்பனத்தனத்தைப் புரிந்துகொள்ளலாம்.

ஒருவருடைய உடல்நலத்தைக்  கூடக் கொச்சைப்படுத்தும் அநாகரிகத்திற்குப் பெயர்தான் ‘தினமலரோ!’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *