கேரள அரசின் அரிய ஆணை

Viduthalai
2 Min Read

பதிவுத் திருமணங்களின்போது மணமக்களின் 

மத விவரங்களை கேட்கக்கூடாது : கேரள அரசு உத்தரவு

திருவனந்தபுரம், ஜூன் 23-  பதிவுத் திருமணங்களின்போது மணமக் களின் மத விவரங்களை கேட்கக் கூடாது என்று அந்த மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து பதிவாளர்களுக் கும் கேரள அரசு உத்தரவு பிறப் பித்துள்ளது.

இதுதொடர்பாக கேரள அரசின் கூடுதல் தலைமைச் செயலர் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதா வது: கடந்த ஆண்டு கொச்சியில் பதிவுத் திருமணம் செய்ய வந்த பி.ஆர். லாலன், ஆயிஷா ஆகியோ ரின் மதம் தொடர்பான விவரங் களை கொச்சி மாநகராட்சி செயலர் கேட்டுள்ளார். இணையர் இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த வர்கள் என்பதால் இந்த விவரங் களை அவர் கேட்டுள்ளார்.

மதங்களைக் கூற அவர்கள் மறுக் கவே திருமணத்தை பதிவு செய்ய முடியாது என்று மாநக ராட்சி செயலர் மறுத்துவிட்டார். இதை எதிர்த்து லாலன்-ஆயிஷா இணையர் இருவரும் கடந்த ஆண்டு கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், மத விவரங்களைக் கேட்காமல் அவர்களது திருமணத்தை பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதைத் தொடர்ந்து பதிவுத் திருமணம் செய்ய வருபவர்கள், திருமணம் செய்த பின்னர் திரும ணத்தை முறையாக பதிவுசெய்ய பதிவாளர் அலுவலகங்களுக்கு வரும் மணமக்களிடம் மத விவ ரங்களை பதிவாளர்கள் கேட்கக் கூடாது. மத விவரங்களை கூற மறுப்பதால் திருமணத்தைப் பதிவு செய்ய முடியாது என்று பதிவா ளர்கள் மறுக்கக்கூடாது.

அதேபோல் மணமக்களின் பெற் றோரின் மத விவரங்களையும் கேட் கக்கூடாது. மணமக்களின் அடை யாள அட்டை, வயது தகுதி போன்ற விவரங்களை பரிசோதித்த பின்னர் அவர்களது திருமணத்தை பதிவாளர்கள் பதிவு செய்யலாம். இந்த உத்தரவை அனைத்து பதிவா ளர்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அதேபோல் திருமணத்தை பதிவு செய்யும் அதிகாரத்தில் உள்ள உள் ளாட்சி அமைப்புகள், பொது பதிவாளர், தலைமைப் பொது பதிவா ளர்களும் இதைப் பின்பற்ற வேண்டும். இந்த உத்தரவை பின்பற்ற மறுக்கும் அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *