கடலில் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிடக் கோரி கன்னியாகுமரி கடற்கரையில் மீனவர்கள் பெரும் போராட்டம்

2 Min Read

கன்னியாகுமரி, ஜூன்.13- கடலில் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரி கன்னியாகுமரி சின்னமுட்டம் கடற்கரையில் மீனவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரும் போராட்டம்

கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகப் பகுதியில் கடற்கரையில் ஏராளமான மீனவர்களும், பெண்களும் திரண்டு நேற்றுமுன்தினம் (11.6.2025) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சின்னமுட்டம் பங்கு பேரவை சார்பில் நடந்த இந்த போராட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள ஆழ்கடல் இயற்கை எரிவாயு திட்டம், கடலில் காற்றாலை அமைக்கும் திட்டம், கடலில் கனிம மணல் எடுக்கும் திட்டம் போன்ற இயற்கையை அழிக்கும் அழிவு திட்டங்களை கைவிடக்கோரியும், கப்பல் விபத்துகளால் கடலும், நிலமும் மாசுபடுவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

 கருப்புக்கொடி ஏந்தி முழக்கம்

போராட்டத்தின்போது மீனவர்கள் தங்கள் படகுகளுடன் கடலில் இறங்கி கைகளில் கருப்புக் கொடியை ஏந்தியபடி ‘பாதுகாத்திடு பாதுகாத்திடு கடலையும் கடலோடிகளையும் பாதுகாத்திடு’ ‘அழிக்காதே அழிக்காதே கடலையும் கடற்கரையையும் அழிக்காதே’ என முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு சின்னமுட்டம் ஊர் நிர்வாக குழுவினர் தலைமை தாங்கினர். ஊர் உறுப்பினர்கள், விசைப்படகு சங்கம், நாட்டுப் படகு சங்கம், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.  மீனவர்களின் போராட்டத்தை தொடர்ந்து கடற்கரையில் ஏராளமான கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகம் பரபரப்பாக காணப்பட்டது.

எந்தப் படிப்பை தேர்வு செய்யலாம்?

தமிழ்நாடு உயர் கல்வித்துறை அரசாணை வெளியீடு

சென்னை, ஜூன் 13 அரசு வேலைவாய்ப்பு நோக்கில் எந்தெந்த படிப்புகள் இணையானவை என உயர்கல்வி துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு உயர்கல்வி துறை செயலர் சமயமூர்த்தி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பிபிஇ (பேச்சிலர் ஆப் பிசினஸ் எகனாமிக்ஸ்) படிப்பு வேலைவாய்ப்பு நோக்கில் பிஏ (பொருளாதாரம்) படிப்புக்கு இணையானது. அதேபோல, சென்னை பல்கலைக்கழகம் வழங்கும் பி.காம். (அக்கவுன்ட்டிங் & ஃபைனான்ஸ்) படிப்பு, பி.காம். (பொது) பட்டப் படிப்புக்கு சமமானது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் சுற்றுலா மேலாண்மை முதுகலை டிப்ளமா படிப்பு, சுற்றுலா மேலாண்மை டிப்ளமா படிப்புக்கு இணையானது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் எம்பிஏ ஓட்டல் மற்றும் சுற்றுலா மேலாண்மை படிப்பானது தமிழ்நாடு அரசின் சுற்றுலா அலுவலர் பதவிக்கான கல்வித் தகுதிகளில் ஒன்றாக நிர்ணயிக்கப்பட்ட சுற்றுலா பாடத்துடன் கூடிய முதுகலை படிப்புக்கு சமமாக கருதப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *